நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியும்.. ஸ்டாலின் அதிரடி சவால்!
நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர்: நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் பிரச்சார களம் தற்போது சூடு பிடித்துள்ளது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி சார்பில் இங்கு போட்டியிடுகிறார். கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வேலூரில் பிரச்சாரம் செய்தார்.
அடுத்து காங்கிரஸ் தலைவர்தான்.. இந்திய இளைஞர் காங்கிரசிற்கு புதிய இடைக்கால தலைவர் நியமனம்!
என்ன சொன்னார்
ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில், தமிழக அரசு அறிவித்த எந்த திட்டங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அவர்கள் அறிவித்த திட்டங்களை சரியாக செய்யவில்லை என்று புகார் வந்தது. இதனால் அதற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி அப்படியே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. மாநில அரசின் திட்டங்களும் இப்படித்தான் முடங்கி உள்ளது.
யார் மகன்
நான் வாய்க்கு வந்ததை எல்லாம் பேச கூடிய ஆள் கிடையாது. நான் கலைஞரின் மகன். எதையும் ஆதாரம் இல்லாமல் பேச மாட்டேன். ஒவ்வொரு துறையிலும் 1000 கோடி ரூபாய் என்று பல்லாயிரம் கோடி ரூபாயை அதிமுக அரசு இப்படி வீணடித்து இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுவது திமுக.
பெரிய வெற்றி
38 தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில் நமது கட்சியே வெற்றி பெற்றது. திமுக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இதுதான் எடுத்துக்காட்டு. ஐந்தரை லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது திமுக தான். இந்தியாவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற கட்சி நாம்தான்.
அழிக்கலாம்
விவசாயிகளை எப்படி எல்லாம் அழிக்கலாம் என்று தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க ஆசைப்படும் அதிமுக அரசு எப்படி விவசாயிகளை காக்கும். எப்படி விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டம் கொண்டு வரும்.
ஒரே நிமிடம்
நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியும். இப்போது கூட ஆட்சியைய் கவிழ்த்து என்னால் பதவி ஏற்க முடியும். ஆனால் கொல்லைப்புறமாக ஆட்சியை அமைக்க எண்ணமில்லை. அதை நான் செய்ய மாட்டேன். தானாக ஆட்சி கவிழும் பாருங்கள், என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேலூரில் பேசியுள்ளார்.