ஒரே நேரத்தில் 2 பேருடன் காதல்.. ஒரு கொடூர மரணம்.. பரிதாபமாக உயிரை விட்ட நிவேதா!
இளம்பெண்ணை கொன்ற 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்
வேலூர்: ஒரே நேரத்தில் 2 பேரை காதலித்தால் இதுதான் கதி என்பதற்கு உதாரணம்தான் நிவேதாவின் கொடூர மரணம்! "கல்யாணம் பண்ணிக்கோ.. கல்யாணம் பண்ணிக்கோ" என்று காதலனை எப்ப பார்த்தாலும் அனத்தி கொண்டே இருக்கவும்.. குவாரியில் தள்ளி கொலை செய்துவிட்டதாக இரு காதலர்களில் ஒருவர் வாக்குமூலம் தந்துள்ளார்.
வேலூரை அடுத்துள்ள புதுவசூர் மலையில் தீர்த்தகிரி முருகன் கோவில் ஒன்று உள்ளது.. இந்த கோயிலுக்கு செல்லும் வழியில் 4 நாட்களுக்கு முன்பு கல்குவாரியில் ஒரு இளம்பெண் சடலமாக கிடந்தார்.. வயது 17 இருக்கும்.. உடல் அழுகி கிடந்தது.. ஆடு மேய்ப்பவர்கள் அந்த பக்கமாக போகவும் பெண்ணின் சடலம் குட்டையில் மிதப்பதை கண்டு போலீசாருக்கு சொன்னார்கள்.
இதையடுத்து சத்துவாச்சாரி போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டனர். அப்போதுதான், அந்த பெண்ணின் முகம் ஒரு பகுதி சிதைந்து போய் இருந்தது.. ஒரு கால் எலும்பு முறிந்து கிடந்தது.. அந்த எலும்வு வெளியே நீட்டிக் கொண்டு இருந்தது.. ஆனால் அந்த பெண் யார் என்று தெரியவில்லை.
கேன்டீன்
இதனால் போலீசார் அழுகிய சடலத்தை மீட்டு விசாரணையில் இறங்கினர். அப்போது, வேலூரை அடுத்த அரியூர்குப்பத்தை சேர்ந்த இளம்பெண் நிவேதாதான் கொலையுண்ட பெண் என்பது தெரியவந்தது. வேலூரில் சிஎம்சி ஆஸ்பத்திரி கேன்டீனில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
விசாரணை
ஆஸ்பத்திரிக்கு போன பெண் வீடு திரும்பவில்லை என்று போலீசில் பெற்றோர் புகார் சொல்லவும்தான், விசாரணை துரிதமானது. வேலை பார்த்த ஆஸ்பத்திரியில் கேன்டீனில் வேலை பார்த்த இளைஞரை நிவேதாவை காதலித்துள்ளார். அதேபோல, ரங்காபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பிரகாஷ் என்பவரையும் காதலித்துள்ளார். அதாவது 2 காதல் ஒரே நேரத்தில் நடந்துள்ளது.
காதல்
இதில் பிரகாஷுடன் பலமுறை தனிமையில் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நிவேதா ஆஸ்பத்திரியில் ஒருவரை காதலிப்பது தெரிந்ததும், பிரகாஷ் கொஞ்சம் கொஞ்சமாக இவரைவிட்டு விலக ஆரம்பித்துள்ளார். ஆனால் இதை நிவேதாவால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.. தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பிரகாஷை கட்டாயப்படுத்தி உள்ளார்.
தொல்லை
இவர் தொல்லை தாங்காமல்தான், நண்பன் நவீன் என்பவருடன் சேர்ந்து நிவேதாவை கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று குவாரிக்கு வர சொல்லவும், கல்யாணம் செய்யும் நோக்கத்தோடுதான், வீட்டில் இருந்து கிளம்பி உள்ளார் நிவேதா.. துணிமணிகள், ஸ்கூல் சர்ட்டிபிகேட், என அத்தனையும் அள்ளி கொண்டு, பிரகாஷை பார்க்க வந்தார்.
கைது
அங்கு வாக்குவாதம் முற்றிய நிலையில், மலைஉச்சியில் இருந்து நிவேதாவை கல்குவாரிக்குள் தள்ளி கொலை செய்துள்ளார் பிரகாஷ். இந்த தீவிர விசாரணைக்கு பிறகு பிரகாஷையும் நவீனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.