நாங்கள் நினைத்தால் ஸ்டாலினை அரசியலில் இருந்து வெளியேற்ற முடியும்.. பாக்கறீங்களா..ராஜேந்திர பாலாஜி
வேலூர்: அரை மணி நேரத்தில் ஆட்சியை மாற்ற நாங்கள் என்ன குமாரசாமியா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என அதிமுகவும், திமுகவும் மல்லுக்கட்டி வருகிறது.
இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகத்தை ஆதரித்து முதல்வர், அமைச்சர்கள் என பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி பேசினார்.
அவர் கூறுகையில் அரைமணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என நினைப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமியா? நாங்கள் நினைத்தால் அரசியலில் இருந்து ஸ்டாலினை வெளியேற்ற முடியும் என்றார் ராஜேந்திர பாலாஜி.
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மஜத ஆட்சி அண்மையில் கவிழ்ந்தது. இதைத்தான் அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.