வேலூர் அருகே காரும் லாரியும் மோதி விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
வேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளார்.
வேலூர்: வேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளார்.
வேலூர் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஆரணியில் இருந்து சென்னை நோக்கி அந்த கார் வேகமாக வந்து இருக்கிறது. அதிகாலை வேலூர் பகுதிக்கு வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த கார் மிகவும் அதிக வேகத்தில் சென்று இருக்கிறது. அப்போது நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்கில் இருந்து வெளியே வந்த லாரி மீது வேகமாக சென்ற கார் மோதியுள்ளது.
இதில் அந்த காரில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். காரில் சென்ற சாதிக் அலி, பர்வீன், மாபூப் பாஷா, அன்வர், அவாமாபி, அகமது பாஷா ஆகிய ஒரே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளார்.
இவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாகனம் கட்டுபாட்டை இழந்து காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக வேலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.