கனமழை.. வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Recommended Video
தேனியில் கொட்டித் தீர்த்த கனமழை... விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி!
வேலூர்: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கர்நாடகம், கேரளம், மகதாராஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்த மாநிலங்களில் இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இதன் தாக்கமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதையடுத்து வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
Comments
English summary
Heavy rain hits in Vellore and its surrounding areas. Collector announces holiday for schools and colleges.
Story first published: Saturday, August 17, 2019, 8:15 [IST]