நான் நேரில் அழகாக இருக்கிறேன்னு சொல்ல வர்றீங்களா.. இப்படியா பேசறது.. ஸ்டாலின் மீது சீமான் அட்டாக்
முக ஸ்டாலினை சீமான் கடுமையாக விமர்சித்து பேசினார்
வேலூர்: "டிவியில பார்க்கிறதைவிட நேரில பார்க்க அழகா இருக்கேன்னு சொல்ல வர்றீங்களா..ன்னு ஸ்டாலின் பெண்களை பார்த்து கேட்கிறார்.. ஐயோ.. கேவலம்.. ஒரு எதிர்க்கட்சி தலைவர் இப்படியா பேசறது?" என்று சீமான் திமுக தலைவரை கடுமையாக சாடி பேசி உள்ளார்.
வேலூரில் 5-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த மும்முனை போட்டியில் நாம் தமிழர் கட்சியும் ஒன்றாகும். வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
"வாக்கு சீட்டுதான் நமக்கு தேவை.. அமெரிக்காவில, ஜப்பான்ல, இப்படி உலகத்துல எங்கியுமே இந்த வாக்கு எந்திர முறை இல்லை. 2 நாட்டிலதான் இந்த வாக்கு எந்திர முறை இருக்கு. ஒன்னு நைஜீரியாவில், இன்னொன்னு இந்தியாவில்.. இந்த ரெண்டு நாடுமே ஊழலில் பெருத்த நாடுகள்.
உனக்கு என்ன வேலை?
இப்போ வேலூரில் 5-ம் தேதி தேர்தல் முடிஞ்சி போகுது இல்லை.. நீதான் டிஜிட்டல் இந்தியாவில இருக்கியே.. தட்டினா கடகடன்னு ரிசல்ட் சொல்லிடும் இல்லே.. ஒரு மணி நேரத்துல, ரெண்டு மணி நேரத்துல எண்ணி சொல்லு.. யார் பாராளுமன்ற உறுப்பினர் என்று? நீ எதுக்கு 9-ம் தேதி வரைக்கும் மூடி வெக்கிறே? எதுக்கு டிஜிட்டல் இந்தியான்னு பீத்திக்கிறே? 9-ம் தேதி வரைக்கும் உனக்கு என்ன வேலை?
ஆட்டம் ஆடுவேன்
இனி 2021- தேர்தலில் ஆட்டமே நான்தான் ஆடுவேன்.. சீமானுக்கு ஓட்டு போட்டால் பாஜக வந்துடும்னு எந்த பம்மாத்தும் அன்னைக்கு செல்லாது. "நாங்கள் வந்தால், நாங்கள் வேளான் கடனை ரத்து செய்வதாக சொன்னோமே.." இப்படி எதுவும் செல்லாது.
உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் இதே வேலூரில் அன்னைக்கு சொல்றாரு.. கூட்டுறவு வங்கியில் நகையை 5 ஆயிரத்துக்கு அடமானம் வெச்சிக்குங்க.. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதனை திருப்பி குடுத்துடறோம்" னு சொல்றார். உலகத்துல இப்படி ஒரு தலைவனை எங்காவது பார்த்திருக்கங்களா? கேவலம்!
அழகாக இருக்கிறேனா?
மாநிலத்தின் துணை முதல்வரா இருந்தவர், ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சியா இருக்கிறவர் சொல்றாரு, "பெண்கள் எல்லாம் டிவி பாக்கிறதை விட்டுட்டு, சீரியல் பாக்கிறதை விட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள். தொலைக்காட்சியில் பார்த்தவன் நேரில் அழகாக இருக்கிறானா இல்லையா என்பதை பார்க்க வந்திருக்கிறீர்கள். நான் அழகாகத்தான் இருக்கிறார் என்று சொல்ல வருகிறீர்களா"ன்னு கேட்கிறார்.. தலையெழுத்து.. ஐயோ கொடுமையே.. உண்மையிலேயே முடியல.." என்றார்.