சீமான் வருகிறார்.. ஆம்பூரில் தொடங்குகிறார் பிரச்சாரத்தை.. யாரையெல்லாம் வெளுக்க போறாரோ!
வேலூரில் தேர்தலை முன்னிட்டு சீமான் இன்று மாலை பிரச்சாரம் செய்கிறார்
சென்னை: இன்னைக்கு சீமான் பிரச்சாரம் செய்ய போகிறார்.. என்னவெல்லாம் பேசப் போறாரோ.. யார் யாரையெல்லாம் ரவுண்டு கட்டி அடிக்க போகிறாரோ என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த முறை தேர்தலில் சீமானின் பிரச்சாரம் பட்டைய கிளப்பியது. ஒட்டுமொத்த மாநிலத்தையும் தங்கள் பக்கம் திரும்ப வைத்தவர்களில் சீமானும் ஒருவர்!
இளம் வாக்காளர்களை, புதிய வாக்காளர்களை, இளைஞர்களை தங்கள் பக்கம் திசை திருப்பி உள்ளார் என்றால் அதற்கு காரணம், ஏதாவது மாற்றம் கிடைக்காதா, மாறுதல் வராதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடுதான்!
சாமிக்கு பலி கொடுக்கும் இடத்தில்.. திமுக பிரமுகர் படுகொலை.. நடுங்க வைக்கும் தூத்துக்குடி சம்பவம்
சீமான்
அதனால்தான் சீமானின் பிரச்சாரம் மிகப் பெரிய வீச்சை கொண்டிருந்தது. இணையத்தில் ட்ரெண்ட்டில் இருந்தது சீமான் பேச்சுக்கள்தான். வெறுமனே வேடிக்கை பார்த்துவிட்டு சும்மா போய்விடவில்லை மக்கள், யோசிக்கும் அளவுக்கு பேசினார் சீமான்.
3-வது இடம்
அதனால்தான் சீமானின் பேச்சுக்களை கண்டு திராவிட கட்சிகளே அரண்டு போயின. தன்னுடைய பேச்சில் வீரியம், காரம் குறையாமல் அதேசமயம் நாக்கை பிடுங்கி கொள்வது போல கேள்விகள் கேட்டதுதான், சீமானை 3-வது இடத்துக்கு கொண்டு வரும் அளவுக்கு உயர்த்தியது.
பிரச்சாரம்
இப்போது வேலூரிலும் இரு திராவிட கட்சிகளுக்கு நடுவே களம் காணுகிறார் சீமான். டிடிவி, கமல் போன்றவர்கள் ஒதுங்கிய நிலையில், துணிந்து பெண் வேட்பாளரை இறக்கி உள்ளார். இது சம்பந்தமான பிரச்சாரம் இன்று மாலை ஆம்பூர், வேலூரில் நடக்க போகிறது.
எதிர்பார்ப்பு
சும்மாவே கேள்வி கேட்பார் சீமான்.. இப்போது பணப்பட்டுவாடா நடந்த நிலையில் வெச்சி செய்வார் என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்! அதனால் போன முறை பிரச்சாரத்தின் அனலே இன்னும் போகாத நிலையில் இன்று நடைபெற உள்ள சீமானின் பிரச்சாரத்துக்கு எதிர்பார்ப்புகள் கிலோ கணக்கில் எகிறி உள்ளன.