வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாட்ஜில்.. பிணமாக கிடந்த அமுலு.. அடுத்த அறையில் தூக்கில் தொங்கிய கணவர்.. வேலூர் ஷாக்!

லாட்ஜில் தற்கொலை செய்து கொண்ட தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

வேலூர்: லாட்ஜ் ரூமில்... படுக்கையில் சடலமாக விழுந்து கிடந்த அமுலுவை பார்த்ததும் ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.. இந்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம், கேவிகுப்பத்தை அடுத்து கீழ்ஆலத்தூர் என்ற கிராமம் உள்ளது.. அங்கு வசித்து வந்தவர் புருஷோத்தமன்... 35 வயதாகிறது.. இவர் ஒரு ராணுவ வீரர்... மனைவி பெயர் அமுலு.. 26 வயதாகிறது.. இவர்களுக்கு கடந்த 2016-ல் கல்யாணம் நடந்தது.

2 வயசில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.. இப்போது அமுலு 2வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.. நிறைமாத கர்ப்பிணியும்கூட..

 நடு ராத்திரி.. சரியான போதை.. தேவி வீட்டு கதவை தட்டி டார்ச்சர்.. பத்ரகாளியாய் மாறி.. சேலம் ஷாக் நடு ராத்திரி.. சரியான போதை.. தேவி வீட்டு கதவை தட்டி டார்ச்சர்.. பத்ரகாளியாய் மாறி.. சேலம் ஷாக்

லாட்ஜ்

லாட்ஜ்

இந்நிலையில் புருஷோத்தமனின் அப்பா ஆறுமுகத்துக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதனால், காஷ்மீரில் இருந்தவர், அப்பாவை பார்ப்பதற்காக லீவு எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்திருந்தார். அப்பாவை சிகிச்சைக்காக, சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.. அவரை அருகில் இருந்தே கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த ஆஸ்பத்திரி பக்கத்திலேயே ஒரு லாட்ஜில் ரூம் எடுத்தார்.. அமுலுவும் அவரும் தங்கியிருந்தனர்.

ரூம் கதவு

ரூம் கதவு

இந்நிலையில், புருஷோத்தமனை பார்ப்பதற்காக அவருடைய அண்ணன் ராஜ்குமார் லாட்ஜுக்கு வந்திருக்கிறார்.. ஆனால், ரூம் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது... ரொம்ப நேரமாக தட்டியும் யாரும் கதவு திறக்கவில்லை. அதனால், புருஷோத்தமனின் செல்போனுக்கு போன் செய்தார்.. ரிங் அடித்தது, ஆனால் யாரும் எடுக்கவில்லை.

பிணம்

பிணம்

இதனால் பதட்டமடைந்த ராஜ்குமார், உடனே லாட்ஜ் மேனேஜருக்கு விஷயத்தை சொன்னார்.. அந்த ரூமின் இன்னொரு சாவி மூலம் கதவை திறந்து பார்த்தபோதுதான், அமுலு கட்டில் மேல் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.. பிறகுதான் சற்று தூரத்தில் அதே ரூமில் ஃபேனில் புருஷோத்தமன் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டனர்.

சடலங்கள்

சடலங்கள்

உடனடியாக வேலூர் வடக்கு போலீசுக்கு தகவல் சொல்லப்படவும், அவர்கள் விரைந்து வந்து 2 பேரின் சடலங்களையும் மீட்டனர்.. அப்போதுதான், அமுலுவின் நாக்கு வெளியே தள்ளிய நிலையில் இருந்ததை கண்டனர்.. அப்படி என்றால், அமுலுவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அதன்பிறகே புருஷோத்தமன் தூக்கில் தொங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், எதற்காக 2 பேரும் செத்து போனார்கள் என்று தெரியவில்லை.

தற்கொலை?

தற்கொலை?

இருந்ததால், மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, ராணுவ வீரர் புருஷோத்தமன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். எதுவானாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் தெரியவரும். கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதும் போலீஸார் இவர்களுக்குள் ஏதாவது சண்டை வந்ததா? அதனாலேயே ஆத்திரத்தில் மனைவியை கொன்று, தற்கொலையில் கணவன் ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

English summary
soldier committed suicide by killing his pregnant wife vellore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X