வாணியம்பாடி பகுதியில் பயங்கர சப்தத்துடன் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் பீதி
வேலூர்: வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பயங்கர சப்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அதனை சுற்றியுள்ள கபூரபாத், வேப்பம்பட்டு, ஜனதாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்தனர்.
இந்த நில அதிர்வு இன்று காலை 11 முதல் 12 வரை ஏற்பட்டு உள்ளது இது சேலம் மேட்டூர் வேலூர் வாணியம்பாடி வரையிலும் உணரப்பட்டது.
முன்னதாக நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் 100 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை பொழிவு காணப்பட்டது. ஒரே நாளில் 165 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், அரக்கோணம், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன,
Comments
English summary
people shocking over Sudden earthquake in vaniyambadi surrounded places on today