வேலூர் மாவட்டம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 28 பேருக்கு ஓட்டு இல்லை.. அதிகாரிகளுடன் வாக்கு வாதம்!
வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 28 பேருக்கு வாக்கு இல்லை என்றதால் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் கௌதம்பேட்டை வாக்குச் சாவடிக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 28 பேர் வாக்களிக்க சென்றனர். ஆனால் அங்கு வாக்காளர் பட்டியலில் இவர்களது 28 பேரின் பெயர்களும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூரில் செலவு செய்த பணம் வீண்.. தேர்தல் ஆணையம் திருப்பி கொடுக்குமா? சீமான் கிடுக்குப்பிடி!
இதனால் அதிர்ச்சி அடைந்த 28 பேரும், தாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் இந்த வாக்குச் சாவடியில்தான் வாக்களித்து வருகிறோம். அப்படியிருக்கும் போது தற்போது மட்டும் எப்படி பெயர் இல்லாமல் போய்விடும் என கேட்டு 28 பேரும் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.