வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே வீட்டில்.. ஒரே ரூமில்.. தனித்தனி ஃபேனில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா?

காட்பாடியில் இரட்டை சகோதரிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்

Google Oneindia Tamil News

வேலூர்: ஒரே வீட்டில்.. ஒரே ரூமில்.. தனித்தனி ஃபேனில் இரட்டையர்கள் தூக்கில் தொங்கிய சம்பவம் காட்பாடி பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது... எப்ப பார்த்தாலும் சமையலில் காரத்தையும், உப்பையும் கொட்டி வைத்து இந்த இரட்டையர்கள் சமையல் செய்வதால், இவர்களின் தாய் அடிக்கடி திட்டியதாக கூறப்படுகிறது.. இதனால் ஏற்பட்ட வேதனையில் இவர்கள் தற்கொலை செய்திருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது!!

Recommended Video

    Katpadi Twin Sisters : ஒரே ரூமில்.. தனித்தனி ஃபேனில் தொங்கிய இரட்டை சகோதரிகள்..

    வேலூரை அடுத்த காட்பாடியை சேர்ந்த தம்பதி பாலசுப்பிரமணியம் - கௌரி.. பாலசுப்பிரமணியம் ஒரு கட்டிட என்ஜினீயர்... இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். மகன் பத்மகுமார் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

    இதில் மகள்கள் பத்மபிரியா, ஹரிப்பிரியா இருவருமே இரட்டையர்கள்.. 2 பேருக்குமே 17 வயது.. 2 பேருமே காட்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 முடித்துள்ளனர்.

    இழுத்து பிடித்து முத்தம்.. கேமரா இருந்தும் அக்கப்போரா.. குவியும் கண்டனம்.. சஸ்பெண்ட்டுக்கு பாராட்டுஇழுத்து பிடித்து முத்தம்.. கேமரா இருந்தும் அக்கப்போரா.. குவியும் கண்டனம்.. சஸ்பெண்ட்டுக்கு பாராட்டு

    சகோதரிகள்

    சகோதரிகள்

    தற்போது பிளஸ் 2-வுக்கு செல்ல இருந்தனர்.. அதற்காக பள்ளியில் ஆன்லைன் வகுப்புகளும் நடந்து வருகின்றன. நேற்று காலை, ஆன்லைன் வகுப்புகள் நடக்க இருக்கிறது, அதை கவனிக்க போகிறோம் என்று சொல்லிவிட்டு, 2 பேரும் வீட்டின் மாடியில் உள்ள ரூமுக்கு சென்றனர்.. அதன்படியே ஆன்லைன் வகுப்புகளையும் கவனித்து கொண்டிருந்தனர்.

    பத்மகுமார்

    பத்மகுமார்

    வீட்டின் கீழ்தளத்தில் கௌரியும், சகோதரன் பத்மகுமாரும் இருந்தனர். காலையில் போனவர்கள், நேரமாகியும் 2 பேரும் மாடியில் இருந்து இறங்கிகீழே வரவில்லை.. சாப்பிடவும் வரவில்லை.. அதனால் அவர்களை சாப்பிட அழைப்பதற்காக கௌரி மாடிக்கு சென்றார்.. கதவு உள்பக்கமாக பூட்டியிருக்கவும், தட்டியுள்ளார்... ரொம்ப நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

    பதட்டம்

    பதட்டம்

    அதனால் ஜன்னலை திறக்கலாம் என்றால் ஜன்னலும் உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அதனால் பதட்டடைந்த கௌரி, உடடினயாக அக்கம்பக்கத்தினருக்கு தகவலை சொல்லவும், அவர்கள் விரைந்து வந்தனர்... ஜன்னலை உடைத்து பார்த்தபோது 2 பேருமே வேற வேற ஃபேனில் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் கௌரி அலறி கதறி துடித்தார்.

    சடலங்கள்

    சடலங்கள்

    உடனடியாக காட்பாடி போலீசாருக்கு தகவல் சொல்லவும் வேர்கள் விரைந்து வந்து, ரூம் கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்கள்.. 2 பேரின் சடலங்களையும் இறக்கி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. இது சம்பந்தமான வழக்கும் பதிவு செய்து எதற்காக இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

    விசாரணை

    விசாரணை

    இதில் கௌரி சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது... இதனால் மகள்கள்தான் சாப்பாடு செய்து வந்திருக்கிறார்கள்.. ஸ்கூலுக்கும் சென்றுவிட்டு, சமையல் வேலையும் பார்த்து வந்துள்ளனர்.. பிள்ளைகளுக்கு 17 வயதே ஆவதால், சரியாக சமைக்க வரவில்லை போலும்.. எப்போது பார்த்தாலும் காரம், உப்பு போட்டு அதிகமா சாப்பாட்டில் போட்டுவிடுவதாக கௌரி, தன் மகள்களை அடிக்கடி திட்டிக் கொண்டே இருந்தாக சொல்லப்படுகிறது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    அதனால் அம்மாவுடன் ஏற்பட்ட தகராறில் இவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் போலீஸார் கருதுகிறார்கள். எனினும் முழு விசாரணை முடிந்தபிறகே உண்மை நிலவரம் தெரியவரும் என நம்பப்படுகிறது. ஒரே வீட்டில் ஒரே ரூமில்.. தனித்தனி ஃபேனில் இரட்டையர்கள் தூக்கில் தொங்கியது காட்பாடி பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    twin sisters committed suicide near katpadi due to family issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X