வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளுத்து வாங்கிய கனமழை.. இரண்டு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பலத்த மழை - சென்னை வானிலை வார்னிங் - வீடியோ

    வேலூர்: இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் கனமழை அல்லது மிதமான மழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாள் முன்பு வரை வெளுத்து வந்த கனமழை அதன் பிறகு படிப்படியாக குறைந்தது.

    Vellore and Tiruvannamalai district schools, colleges holiday today due to heavy rain

    இந்நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் மழை பல இடங்களில் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவத்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.'

    இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று (29.10.2019) வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    English summary
    hweavy rain: Vellore and Tiruvannamalai district schools, colleges holiday today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X