வேலூர் மாவட்டம் விரைவில் 3 ஆக பிரிக்கப்படும்... அமைச்சர் கே.சி. வீரமணி தகவல்
Recommended Video
வேலூர்: வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தை விட்டு பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக நேற்று சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் எடிப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் 33-வது மாவட்டமாக உதயமாகிறது கள்ளக்குறிச்சி. அதில், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் உள்ளிட்டவை அடங்கும்.
இந்தநிலையில், வேலூரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் வேலுமணி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க முதலமைச்சர் பழனிசாமி பரிசீலித்து வருகிறார். மேலும், இரண்டு மாவட்டங்களாக பிரித்தால் நிர்வாக வசதிக்கு வாய்ப்பு குறைவு, மூன்று மாவட்டங்களாக பிரித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறேன்.
திருப்பத்தூர், அரக்கோணம், மத்தியில் வேலூர் என மூன்றாக பிரிக்க வருங்காலத்தில் தேவையான நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன் என்றார்.