அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் வேலூர் ஞானசேகரன்!.. அடுத்தடுத்து உருண்டோடும் தலைகள்!
வேலூர்: அமமுகவிலிருந்து விலகிய வேலூர் ஞானசேகரன் திமுகவில் இணைந்தார்.
வேலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஞானசேகரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக இணைந்தார்.
இதையடுத்து அக்கட்சியிலிருந்து விலகிய ஞானசேகரன், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். அவர் தொடங்கிய அமமுகவில் இணைந்து அமைப்பு செயலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்த ஞானசேகரன் திமுகவில் இணைந்தார். ஏற்கெனவே அமமுகவிலிருந்து விலகிய செந்தில் பாலாஜி, தங்கதமிழ்ச் செல்வன் ஆகியோர் திமுகவிலும் , இசக்கி சுப்பையா அதிமுகவிலும் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஞானசேகரனும் அந்தக் கட்சியிலிருந்து விலகுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.