மனைவியை கூட்டிக்கொண்டு ஓடிய காதலன்.. ஓராண்டுக்குப்பின் வெட்டிக்கொன்று பழிதீர்த்த கணவன்
வேலூர்: வேலூரில் ஓராண்டுக்கு முன் மனைவியை கூட்டிக்கொண்டு ஓடிப்போனதால ஆத்திரத்தில் இருந்த சரவணன், ஓராண்டு பின் பார்த்த மனைவியின் காதலன் கோபியை ஏதேச்சையாக பார்த்த நிலையில் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றார். இந்த கொலை தொடர்பாக சரவணனை போலீஸார் தேடிவருகிறார்கள்.
வேலூர், சலவன்பேட்டை கச்சேரி ஸ்கூல் தெருவில் வசித்தவர் கோபி (38). கார் ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (35) என்பவரின் மனைவி ரமணிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. . இதனால் ஓராண்டுக்கு முன்னர் கணவரைப் பிரிந்த ரமணி, காதலன் கோபியுடன் ஒடிப்போனார்.
அதன்பின்னர் ரமணியும் கோபியும் பெங்களூருவில் குடும்பம் நடத்திவந்திருக்கிறார்கள. இதனால் தனக்கு துரோகம் செய்த மனைவி ரமணிமீதும், அவரை அழைத்துச் சென்ற காதலன் கோபி மீதும் சரவணன் பார்த்தால் கொன்றுவிட வேண்டும் என்கிற அளவிற்கு ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.. இந்தநிலையில், உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் பெங்களூரிலிருந்து வேலூருக்கு கோபி வந்திருக்கிறார்
ஹைகோர்ட்டை நம்பி காலை வைத்த சினேகா.. கண்ணீரை துடைத்த சட்டம்... கிடைத்தது வேலை!
இதையறிந்த சரவணன் கோபியை கொன்றுவிட முடிவு செய்திருக்கிறார். அம்மனாங்குட்டை என்ற இடத்தில் நின்றிருந்த கோபியை நேற்று முன்தினம் இரவு சரவணன் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினார், உறவினர்கள் கோபியை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால் சிகிச்சைப் பலனின்றி கோபி நேற்று மரணமடைந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, வேலூர் தெற்கு காவல் நிலைய போலீஸார், சரவணன் மீது கொலை வழக்கு பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகிறார்கள். கொலைக்கு உடந்தையாக மேலும் இரண்டு பேர் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதால் அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.