சென்னை பேராசிரியைக்கு ஓடும் ரயிலில் 61வயது முதியவர் செய்யும் காரியமா அது? தர்ம அடி.. கைது!
வேலூர்: சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியைக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை லாவண்யா( பெயர் மாற்றப்பட்டுள்ளது), கோவையில் உள்ள உறவினரை பார்க்க வந்திருந்தார்.
பின்னர் கோவையில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் லாவண்யா புறப்பட்டார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அந்த ரயில் காட்பாடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேராசிரியை லாவண்யாவின் அருகே அமர்ந்து பயணம் செய்த முதியவர், பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த பேராசிரியை கத்தி கூச்சலிட்டார்.
இதைப்பார்த்த மற்ற பயணிகள் அந்த முதியவருக்கு தர்மஅடி கொடுத்தனர். காட்பாடி வந்ததும் ரயில்வே போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (61) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.