வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலூர்: ஓடாதே நில்லு.. சுட்டுடுவோம்.. பிரபல ரவுடியை துப்பாக்கி முனையில் பிடித்த போலீஸ்

Google Oneindia Tamil News

வேலூர்: தலைமறைவாக இருந்து ரவுடியை, ஓடாதே நில்லு, சுட்டுடுவோம் என்று துப்பாக்கி முனையில் வேலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

Recommended Video

    பிரபல ரவுடியை துப்பாக்கி முனையில் பிடித்த போலீஸ்.. வேலூரில் நடந்த சம்பவம் - வீடியோ

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் வண்டரத்தாங்கல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜானி. ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    Vellore rowdy arrested by gun point by police when he try escape

    சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த ஜானி, தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க வேலூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். அதில் பலன் இல்லாமல் போக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் பெங்களூருவில் அவர் பதுங்கி இருப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். இனிடையே அங்கு பதுங்கி இருந்த ஜானி, போலீஸ் வருவதை அறிந்து தப்பிக்க முயற்சித்தார். அவரை விரட்டிய போலீசார், ஓடாதே நில்லு, ஓடினால் சுட்டுடுவோம் என்று மிரட்டினர்.

    தலையில தொப்பி.. உத்துப் பாருங்க.. யார்னு தெரியுதா.. அடடே.. தலையில தொப்பி.. உத்துப் பாருங்க.. யார்னு தெரியுதா.. அடடே.. "ஜெ.ஜெ"ன்னு இருக்காரே.. சூப்பர் செல்பி!

    அதன்பின்னர் துப்பாக்கி முனையில் மடக்கி ஜானியை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் கைது நடவடிக்கையின் போது, தனது மனைவிக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசிய ஜானி, போலீசார் தம்மை காப்பாற்றுமாறு கூச்சலிட்டவாறு ஓடியது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    English summary
    vellore rowdy arrested by gun point by police when he try escape from Bangalore. rowdy asked help from his wife via whatsapp video call. this video going viral on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X