விஜய்க்கு இதே வேலையாக போய்விட்டது.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
Recommended Video
வேலூர்: விஜய் சமீபகாலமாக சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து வருவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா குற்றம்சாட்டினார்.
வேலூரில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். இதன், பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியாவது:
சினிமாவைச் சினிமாவாக பார்க்க வேண்டும். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மோதல்களில் ஈடுபட கூடாது.
அத... செலவு பண்ணிட்டோம்.. ஒரு ரூபாய் கூட இப்போ இல்லை.. சேலம் கொள்ளையர் வாக்குமூலம்
சர்ச்சை
திரையுலகினர் திரைப் படங்களை சர்ச்சைக்குள் கொண்டுச்சென்று, அதன் மூலம் படத்தை ஓட்ட நினைக்கிறார்களா என்றும் தோன்றுகிறது. சமீபகால நடவடிக்கைகள் பலவும் அப்படித்தான் மக்களை யோசிக்க வைத்துள்ளது.
உள்நோக்கம் என்ன
அப்படியான படங்களில்தான் விஜய் சமீபகாலமாக நடித்து வருகிறார். இதையெல்லாம் யோசித்து பார்த்து விஜய் நடிக்க வேண்டும். அதேநேரம் சென்சார் செய்யப்பட்ட படத்தை அதிமுகவினர் தடை செய்வது வன்மையாகன கண்டனத்திற்கு உரியது. ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையே.
மக்கள் பிரச்சினை
வேலைவாய்ப்புகள், குடி தண்ணீர், டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என மக்கள் பல கஷ்டங்களைபடும் நிலையில், திரைப்படத்தின் பின்னால் ஆட்சியாளர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் மீது இவ்வளவுதான் அக்கறை. ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த மக்களுக்கு அமைச்சர்கள் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
குளிர்விட்டுப்போனது
ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டுப்போனதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆனால் ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்களுக்கும் குளிர்விட்டுப்போயுள்ளது. இவ்வாறு பிரேமலாதா விஜயகாந்த் தெரிவித்தார்.