எங்களிடம் நல்ல திட்டங்கள் மட்டுமே உள்ளது.. பணம் இல்லை.. சொல்கிறார் அன்புமணி
காட்பாடி: திமுகவிடம் பெட்டி, பெட்டியாக பணம் உள்ளது என்றும் தங்களிடம் நல்ல திட்டங்கள் மட்டுமே உள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியை ஆதரித்து, அன்புமணி ராமதாஸ் காட்பாடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், எதிர் அணியில் உள்ளவர்கள் பணம் மூட்டைகளை வைத்துள்ளதாகவும், ஆனால் தங்களிடம் நல்ல திட்டங்கள் மட்டுமே உள்ளதாகவும் கூறினார். மேலும், தோல்வி பயம் உள்ளதால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பொய்களை பேசி வருவதாக விமர்சனம் செய்தார்.
அன்புமணியின் அரசியல் இப்படித்தான் ஆரம்பித்ததா? சுவாரஸ்ய தகவல்கள்
திமுகவிடம் பெட்டி, பெட்டியாக பணம் மட்டும் தான் உள்ளது. உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த எந்த திட்டமும் அவர்களிடம் கிடையாது.உங்களைப் பற்றியும், உங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும். படித்த பிள்ளைகளுக்கு நல்ல வேலை இருக்க வேண்டும்.
குடிநீர் பிரச்சினைகள் தீர வேண்டும் மற்றும் தொழில் வளம் பெருக வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கூட்டணி சேர்ந்திருக்கிறோம் என விளக்கமளித்தார். நீங்கள் சிந்தியுங்கள், வாக்களியுங்கள் என்றும் கூறினார்.
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு எப்படி நடக்கிறது பணப்பட்டுவாடா.. அதிர வைக்கும் உண்மைகள்