என் மனைவியும்.. உன் கணவரும்.. இந்தா செருப்பு நல்லா அடி.. வாணியம்பாடியில் பரபரப்பு.. வைரல் வீடியோ
தகாத உறவு காரணமாக கணவனை மனைவி செருப்பால் அடித்துள்ளார்
Recommended Video
வேலூர்: "என் மனைவியும், உன் புருஷனும் உறவு வெச்சிருக்காங்க.. இந்தா செருப்பு.. அவனை அடி" என்று நண்பன் சொல்ல, அதன்படியே தன் கணவனை செருப்பால் அடித்துள்ளார் மனைவி. இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் வசித்து வருபவர்கள் கபீர் மற்றும் இர்பான். இவர்கள் இருவரும் நண்பர்கள். கத்தார் நாட்டிற்கு வேலைக்கு சென்றிருக்கிறார்கள்.
இந்த நிலையில் கபீர் மனைவிக்கும் இர்பானுக்கும் உறவு ஏற்பட்டுவிட்டது. நண்பனே இப்படி ஒரு துரோகத்தை செய்ததை கபீரால் பொறுத்து கொள்ள முடியவில்லை.
ஹெல்மெட் போடல.. ஃபைனும் கட்டல.. போலீசும் பிடிக்கல.. இதெப்படி இருக்கு.. வைரலாகும் கலகல வீடியோ!
கபீர்
அதனால், குடும்பத்தினரை அங்கிருந்து கூட்டிக் கொண்டு, 3 நாளைக்கு முன்னாடி வாணியம்பாடிக்கு வந்தார்.நேராக இர்பான் வீட்டுக்கு சென்ற கபீர், இர்பான் மனைவியிடம் "என் மனைவியும், உன் புருஷனும் தகாத உறவு வெச்சிருக்காங்க.. அவனை என்கிட்ட ஒப்படை" என்றார்.
செருப்படி
வீட்டுக்குள் இருந்து இதை கேட்ட இர்பானுக்கு ஆத்திரம் வந்தது. மனைவியிடம் தன்னை போட்டு கொடுத்ததால், இர்பானை கபீரும், நண்பர்களும் சேர்ந்து தாக்கி உள்ளனர்.உடனே கபீர், இர்பான் மனைவியின் கையில் செருப்பை தந்து இர்பானை அடிக்க சொல்லி உள்ளார்.
வீடியோ
அதன்படியே மனைவியும், அடிக்க.. அதை கபீர் செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர், "இவர் குழந்தைகளிடம் தவறாக நடக்கக் கூடியவர், பொதுமக்கள் இவரை அடித்ததைப் பாருங்க" என்று அதை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளார்.
விசாரணை
இந்த வீடியோவை பார்த்த இர்பான் தரப்பு, பொய்யான தகவலை மாற்றி இணையத்தில் கபீர் செய்துவிட்டதாக கூறி, மாவட்ட எஸ்பி ஆபீசில் புகார் தந்துள்ளனர். இதையடுத்து, போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரித்துள்ளனர். நண்பனை, அவரது மனைவியை விட்டு செருப்பால் அடிக்க செய்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.