வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கஞ்சா விற்ற வள்ளி.. அள்ளிய ஆம்பூர் மகளிர் போலீஸ்!
ஆம்பூர் அருகே கஞ்சா விற்ற பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார்
Recommended Video
வேலூர்: "விடுங்க.. ஏன் என்னை போட்டோ எடுக்கறீங்க" என்று கேட்ட வள்ளியை போலீசார் இழுத்து கொண்டு போய் ஆட்டோவில் ஏற்றினர்!
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டித்தோப்பு கல்லூரி சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆம்பூர் நகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசாரும் ரெட்டித்தோப்பு பகுதிக்கு வந்து, கஞ்சா விற்பனை செய்வது யார் என்று கண்காணித்தனர்.
அப்போதுதான் இவ்வளவு நாள் கஞ்சாவை அந்த பகுதியில் விற்று வந்தது ஒரு பெண் என்று தெரியவந்தது. இதையடுத்து, அங்கு ஓர் வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்து கஞ்சா விற்று கொண்டிருந்த வள்ளி என்ற பெண்ணை சுற்றி வளைத்தனர்.
அவரை கைது செய்து ஆட்டோவில் ஏற்ற பெண் போலீசார் முயன்றனர். அப்போது, அங்கிருந்தோர் இதை படம் பிடிக்க முயன்றனர். இதை பார்த்த வள்ளி, "விடுங்க.. என்னை எங்கே கூட்டிட்டு போறீங்க.. ஏன் என்னை போட்டோ எடுக்கறீங்க" என்று கேட்டு கொண்டே ஆட்டோவில் ஏற முரண்டு பிடித்தார்.
மாப்பிள்ளையை தாக்கி.. பெண்ணை இழுத்து சென்ற காதலன்.. விருதாச்சலத்தில் பரபரப்பு.. மறியல்!
ஆனாலும் பெண் போலீசார் வள்ளியை இழுத்து கொண்டு போய் ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்! அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த ஆம்பூர் மகளிர் போலீசார், வள்ளி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.