கள்ளக்காதலி விஜயா.. கல்லை போட்டு கொன்ற மேஸ்திரி.. காரணத்தை கேட்டால் வெட்க கேடு!
Recommended Video
ஆரணி: கள்ளக்காதலி விஜயாவின் தலையில் மேஸ்திரி கல்லை போட்டு ஏன் கொன்றார் என்ற காரணத்தை கேட்டீங்கன்னு வெச்சுக்கங்க.. மகா கேவலமா இருக்கும்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வெலுக்கனந்தலை சேர்ந்தவர் விஜயா. கணவன் ஞானசேகர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
விஜயா சித்தாள் வேலை செய்பவர். சம்பவத்தன்று வழக்கம் போல வேலைக்கு சென்ற விஜயா சாயங்காலம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் வீட்டில் உள்ளவர்கள் பயந்துபோய் பல இடங்களில் தேடி பார்த்தனர். கடைசியில் போலீசுக்கும் போய் புகார் சொன்னார்கள். அதனடிப்படையில் போலீசார் விஜயாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் குன்றுமேடு காட்டுபகுதியில் விஜயாவின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். அவரது தலையில் யாரோ கல்லை போட்டு கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக போலீசார் விசாரணை நடத்தியதுடன், அவருடன் வேலை பார்த்த மேஸ்திரி சுப்பிரமணியை கைது செய்தனர்.
பிறகுதான் தெரியவந்தது, விஜயாவும் மேஸ்திரியும் கள்ளக்காதலர்கள். இதில் விஜயாவின் மகள் மீதும் மேஸ்திரிக்கு ஆசை வந்துவிட்டது. அதனால் மகளை தனக்கு கட்டித் தரவேண்டும் என்று விஜயாவிடமே மேஸ்திரி கேட்க, அதற்கு இந்த தாயும் சம்மதம் சொல்லி உள்ளார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக வேறு ஒரு இடத்தில் மகளை கல்யாணம் பண்ணி தந்துவிட்டாராம் விஜயா. இதனால்தான் ஆத்திரம் அடைந்து விஜயாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக போலீசில் சொல்லி உள்ளார். இதையடுத்து, சந்தவாசல் போலீசார் தொடர்ந்து மேஸ்திரியை விசாரித்து வருகிறார்கள்.