கம்பத்தில் வாகன சோதனையின் போது 42 கிலோ கஞ்சா பறிமுதல்- வீடியோ
கம்பம் அருகே வாகன தணிக்கையின் போது இருவேறு இடங்களில் 42 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கம்பம் : தேனி மாவட்டம் கம்பம் அருகே போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் 42 கிலோ கஞ்சா போதைபொருள் பறிமதல் செய்யப்பட்டது.
கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் கஞ்சா கைமாறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் வாகன தணிக்கையை போலீசார் தீவிரப்படுத்தினர். அப்போது கம்பம் - பம்பை சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை சோதனை செய்த அதிகாரிகள் அதிலிருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் பிரபு மற்றும் துறைப்பாண்டி ஆகிய 2 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்களிடமிருந்து கேரளாவுக்கு கஞ்சா வாங்கிச்சென்றது தெரியவந்தது.
கம்பம் மேட்டுசாலையில் சிலுவைக்கோயில் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவ்வழியாக வந்த டாடா சுமோவில் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் இதுதொடர்பாக கேரளாவைச் சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளனர்.