For Daily Alerts
Just In
ஆயுத பூஜை.. சாமந்திப் பூ விலை உயர்வு.. ஆனால் விளைச்சல் குறைவு... கவலையில் விவசாயிகள் -வீடியோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாமந்திப் பூ விளைச்சல் குறைந்து விட்டதால் ஆயுதப் பூஜைக்கு வியாபாரம் களை கட்டாமல் போயுள்ளது. இதனால் வியாபாரிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, சூளகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 4000 ஏக்கர் பரப்பளவில் சாமந்திப்பூ பயிரிடப்படடுள்ளது.ஆயுத பூஜை சமயத்தில் இவை சாகுபடி செய்யப்படும். இந்த பூக்களுக்கு சென்னை, கோவை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல கிராக்கி உள்ளது. ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் சரியில்லை. மேலும் பூக்களின் நிறமும் சரியில்லை. குறைந்த அளவிலேயே பூக்கள் பூத்துள்ளது. அதேசமயம், சாமந்திப் பூ விலை உயர்ந்து காணப்படுகிறது. விளைச்சல் இல்லாமல் போய் விட்டதால் பூ விலை உயர்ந்து காணப்பட்டும் கூட லாபம் குறைவாகவே கிடைப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
Ayutha Poojai Samanthi poo sales is high in Krishnagiri but shortage of flowers have worried the farmers in the district.
Story first published: Sunday, October 9, 2016, 11:11 [IST]