For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரி அருகே முதியவரின் முகத்தைக் கடித்துக் குதறிய கரடி! - வீடியோ
சேலம்: கிருஷ்ணகிரி அருகே கரடி தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். கரடி தாக்கியதால் முதியவரின் முகம் முற்றிலுமாக சிதைந்துள்ளது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ளது ஏக்கல் நத்தம் கிராமம். இங்கு கதிரியப்பன், என்பவர் அங்குள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள ஏரியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது புதர் ஒன்றில் குட்டியுடன் பதுங்கி இருந்த கரடி, திடீரென கதிரியப்பனைத் தாக்கியது. இதில் கதிரியப்பன் முகம் முற்றிலுமாக சிதைந்தது.
Comments
English summary
A bear has attacked a elderly man near Veppanahalli in Krishnakiri who was admitted to Salem hospital for higher treatment.
Story first published: Monday, August 15, 2016, 15:43 [IST]