For Daily Alerts
Just In
இனி குழந்தைகளை கடத்த முடியாது.. அரசு மருத்துவமனையில் விரைவில் சிசிடிவி கேமரா
திருப்பூர்: திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிசிடிவி கேமரா பொருத்துவது தொடர்பாக காவல்துறை இணை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூரில் சுமார் 8 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 2000 முதல் 3000 வரை உள் மற்றும் வெளிப்புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த இடங்களில் குழந்தைகள் கடத்தல் நடைபெறாமல் இருக்க சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சேலத்தில் பிறந்து 2 நாட்களான குழந்தையும், கோவையில் ஒரு குழந்தையும் கடத்தப்பட்டதையடுத்து தீவிர கண்காணிப்பில் மருத்துவமனையை கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Comments
oneindia tamil videos cctv government hospital ஒன்இந்தியா தமிழ் வீடியோ சிசிடிவி அரசு மருத்துவமனை குழந்தை கடத்தல்
English summary
CCTV units will be installed at government hospital in Tiruppur to prevent baby kidnapping.
Story first published: Monday, November 14, 2016, 10:41 [IST]