For Daily Alerts
Just In
படைப்பாளிகளுக்கு மரணம் கிடையாது... சோவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய வைகோ புகழாரம்- வீடியோ
சென்னை: தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நடிகரும் நாடக ஆசிரியருமான சோ ராமசாமி(82) இன்று அதிகாலையில் மாரடைப்பால் காலமானார். எம்.ஆர்.சி நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சோவின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், திரையுலகினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், சோவின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வைகோ, "படைப்பாளிகளுக்கு மரணம் கிடையாது. எழுத்தாளர்களுக்கு மரணம் கிடையாது. விடுதலைப்புலிகள் பிரச்சினையில் என்னை கடுமையாக விமர்சித்தவர் சோ. ஆனால், மற்ற சில இலக்கியப் பிரச்சினைகளில் நான் அவருடன் உடன் படுகிறவன்" என்றார்.
Comments
vaiko tribute cho ramaswamy chennai oneindia tamil videos வைகோ சோ ராமசாமி மரணம் இரங்கல் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The MDMK general secretary Vaiko paid homage to the veteran actor Cho Ramaswamy at his residence in Chennai.
Story first published: Wednesday, December 7, 2016, 20:05 [IST]