தவறான சிகிச்சையால் உடல் கருகி இளம்பெண் பலி... நஷ்ட ஈடு கேட்டு உறவினர்கள் போராட்டம்- வீடியோ
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா என்ற எம்பிஏ பட்டதாரி. தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்த கவிதாவிற்கு சமீபத்தில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால், உடல் கருகி கவிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் உரிய நஷ்ட ஈடு வழங்கக்கோரி போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து தாசில்தார் முன்னிலையில் ரூ. 6 லட்சம் சிகிச்சைக்காகவும், ரூ. 6 லட்சமும் நஷ்ட ஈடாக தருவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதன்படி பாதிக்கப்பட்ட கவிதாவின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு அளிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கவிதாவின் உறவினர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் நஷ்ட ஈடு வேண்டி குன்னூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.