For Daily Alerts
Just In
திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் திடீரென செத்து மிதந்த மீன்கள்.. பக்தர்கள் அதிர்ச்சி- வீடியோ
மதுரை: மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவிலின் கிழக்கு பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சரவணப் பொய்கை அமைந்து உள்ளது. இந்த பொய்கையில் தான் முருகப்பெருமான் பாலகனாக அவதரித்தாக கூறப்படுகிறது. எனவே இந்த பொய்கை நீரில் விரதம் இருக்கும் பக்தர்கள் நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து இந்தப் பொய்கையில் திடீரென ஆயிரக்காணக்கான மீன்கள் செத்து தண்ணீரில் மிதக்கத் தொடங்கின. அதனால் பொய்கையின் புனித நீர் மாசுபடிந்ததோடு துர்நாற்றம் வீச தொடங்கியது. ஆகவே பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நீராட முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீடியோ:
Comments
English summary
Thousands of dead fish that floated on the surface of the Saravanapoigai tank, which belongs to the Sri Subramaniaswamy temple in Thiruparankundram in Madurai, caused a flutter in the locality on Sunday.
Story first published: Tuesday, September 6, 2016, 12:39 [IST]