For Daily Alerts
Just In
ரூ. 500, 1000 நோட்டுகளை பயன்படுத்த டிசம்பர் 31 வரை அவகாசம் தேவை.. ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை- வீடியோ
திருப்பூர்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள, டிசம்பர் 31-ம் தேதி வரை அனுமதிக்க வேண்டும். விவசாயம், தொழில், வர்த்தகம் என பல்வேறு துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில்துறை வர்த்தகம் 50 முதல் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது" என்றார். மேலும் அவர், "கறுப்புப் பணத்தில் 94 சதவீதம் வெளிநாட்டு கரன்ஸி, தங்கக் கட்டிகள், ரியல் எஸ்டேட் முதலீடுகள் என பல வடிவத்தில் இயங்குகின்றன. வெறும் 6 சதவீதம் நோட்டுகளே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, பிரதமரின் இந்த நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை முற்றாக ஒழிக்க முடியாது" எனத் தெரிவித்தார்.
Comments
g ramakrishnan cpi tirupur oneindia tamil videos ரூ 500 abduct ஜி ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
“Considering the apparent hardships faced by the common man, the authorities should allow to use the now withdrawn Rs. 500 and Rs. 1,000 as legal tenders till December 31 before phasing them out” CPI (M) state secretary G. Ramakrishnan told reporters here on Sunday.