For Daily Alerts
Just In
கடம்பூர் மலைப்பகுதியில் மின்வேலியில் சிக்கி யானை பலி... தோட்ட உரிமையாளர் கைது- வீடியோ
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில், மூலக்கடம்பூர் கிராமம் தோட்டத்து மின்வேலியில் சிக்கி 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்லால், டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர் சிவசுப்பிரமணியம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். பின்னர் யானை உயிரிழப்புக்கு காரணமாக தோட்ட உரிமையாளர் தங்கவேல் கைது செய்யப்பட்டார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அதே இடத்தில் யானை புதைக்கப்பட்டது.
Comments
English summary
A male elephant aged about 15 years was found electrocuted at a farm in Melkadambur near Kadambur in T.N. Palayam Range on Thursday.
Story first published: Friday, November 4, 2016, 14:45 [IST]