For Daily Alerts
Just In
புதுவை: தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பணி நீக்க ஊழியர்கள்- வீடியோ
புதுச்சேரி: புதுவையில் கடந்த ஆட்சியின் போது தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு அரசு பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால், தங்களை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்தி தொடர்ந்து அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று காலை 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பளம் பொதுப்பணித்துறை தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ:
Comments
puducherry protest jobs oneindia tamil videos புதுச்சேரி போராட்டம் தற்கொலை மிரட்டல் வேலை ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Puducherry expelled government employees staged a protest demanding to give employment.
Story first published: Wednesday, August 31, 2016, 19:42 [IST]