For Daily Alerts
Just In
சிவகங்கையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு: 35 பேர் கைது, காளைகள் பறிமுதல்- வீடியோ
சிவகங்கை: சிவகங்கை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற 35 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிவகங்கை அருகே காளமேக்கி என்ற கிராமத்தில் தடையை மீறி நேற்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. நள்ளிரவில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஜல்லிக்கட்டுக்கு தயாராக இருந்த 6 காளைகள், அவற்றைக் கொண்டு வந்த 5 சரக்கு வேன்கள் மற்றும் 16 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 35 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
வீடியோ
Comments
English summary
35 persons arrested for conducting jallikattu in Sivagangai.
Story first published: Monday, October 3, 2016, 12:41 [IST]