காவல் நிலையம் அருகில் ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை: வீடியோ
மதுரை: காவல் நிலையம் அருகில் ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் எஸ்.எஸ். காலனியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார் மதுரையைச் சேர்ந்த நாகபாண்டி. இந்த கொலை வழக்கு தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு நாகபாண்டி வெளியே வந்த போது, டாடா சுமோ மற்றும் 2 சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் நாகபாண்டி மீது மிளகாய் பொடி தூவி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இடைத் தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் அருகில் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.