அல்-கொய்தாவுடன் தொடர்புடைய 3 பேர் கைது.. மோடி உட்பட 22 பேரை கொல்லும் சதி அம்பலம்- வீடியோ
மதுரை: மதுரையில் அல்-கொய்தா பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர்கள் பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனை நடத்தி வந்தனர். அப்போது அல்-கொய்தா பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 22 தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேர் இந்தியாவில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் எம் காரீப், ஆசிப் சுல்தான் முகமது மற்றும் அப்பாஸ் அலி என்று அடையாளம் காணப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, தலைமறைவாக உள்ள இவர்களின் கூட்டாளிகள் இருவரைத் தற்போது போலீசார் தேடி வருகின்றனர்.