For Daily Alerts
Just In
ஹைகோர்ட் உத்தரவை மீறி மணல் கொள்ளை நடக்கிறது... பழ.நெடுமாறன் கண்டனம்- வீடியோ
கரூர்: கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியில் காவிரி ஆற்றில் மணல் அள்ளும் இடங்களை காவிரி பாதுகாப்பு குழுவினருடன் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், 'உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் மணல்கொள்ளை தங்கு தடையின்றி நடப்பதை கண்டிப்பதாக' தெரிவித்தார். மேலும், மணல் கொள்ளையை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும், இதனால் எதிர்காலத்தில் இந்த ஆற்றை நம்பியிருப்பவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
Comments
English summary
The President of Tamilar Desiya Munnani Pazha Nedumaran, has condemned that the sand mafia activities that is taking place in Tamilnadu river.
Story first published: Friday, October 28, 2016, 18:29 [IST]