For Daily Alerts
Just In
மருத்துவர்கள் அலட்சியம், சிவகங்கை அரசு மருத்துவமனை முற்றுகை - வீடியோ
சிவகங்கை: பாம்பு கடித்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்ககாததால் உயிரிழந்து விட்டதாக கூறி பால் வியாபாரி ஒருவரின் உறவினர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கையைச் சேர்ந்த பால்வியாபாரி காளையார் கோவிலில் உள்ள மகள் வீட்டிற்கு சென்ற போது நள்ளிரவில் அவரை பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்புக்கு போதிய சிகிச்சை அளிக்காததே காரணம் என்று இறந்த பால் வியாபாரியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Comments
English summary
hundreds of people protest against Sivagangai hospital for careless treatment.
Story first published: Saturday, August 20, 2016, 16:43 [IST]