For Daily Alerts
Just In
80 கோடி எங்கே... வர்ஷா யார்... விடிய விடிய துருவித் துருவி மதனிடம் விசாரணை நடத்திய போலீஸ்- வீடியோ
சென்னை: சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக மாணவர்களிடம் ரூ. 80 கோடி வரை பணமோசடி செய்ததாக தொடரப்பட வழக்கில் தேடப்பட்டு வந்த திரைப்பட தயாரிப்பாளர் மதன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பூரில் கைது செய்யப்பட்டார். அவரை சைதாப்பேட்டை 11 ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், 10 நாள்கள் மதனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். இந்த மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் பிரகாஷ், மதனுக்கு 7 நாள்கள் போலீஸ் காவல் அளித்து நேற்று உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் மதனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, மாணவர்களிடம் இருந்து பெற்ற ரூ. 80 கோடி எங்கே, வர்ஷா யார் என்பது உள்ளிட்ட பல கேள்விகளை அவர்கள் மதனிடம் எழுப்பியதாகத் தெரிகிறது.
Comments
madhan producer srm scam police custody oneindia tamil videos தயாரிப்பாளர் மதன் திருப்பூர் கைது போலீஸ் காவல்
English summary
Arrested film producer S Madhan was produced before the Saidapet court, where the Central Crime Branch (CCB) police were granted his custody of seven days till 29 November. After taking Madhan in custody the police have started their enquiry.
Story first published: Thursday, November 24, 2016, 15:54 [IST]