For Daily Alerts
Just In
ராம்குமாரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு - வீடியோ
சென்னை: புழல் சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 18ம் தேதி வாயில் மின்கம்பியை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதால், தனியார் மருத்துவர் ஒருவர் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும் என்று கோரி அவரது தந்தை பரமசிவம் ஹைகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடியும் வெற்றி பெற முடியவில்லை. இதனையடுத்து, ஹைகோர்ட் உத்தரவுப்படி எய்ம்ஸ் டாக்டர் சுதிர் குப்தா முன்னிலையில் பிரேத பரிசோதனை முடித்து ராம்குமாரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Comments
English summary
Ramkumar’s body, after post-mortem, has been handed over to his parents on Saturday.
Story first published: Sunday, October 2, 2016, 12:11 [IST]