For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக்... ‘குடி’மகன்களால் பீதி.. கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம் - வீடியோ

Google Oneindia Tamil News

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் அருகே கோவில் மற்றும் பள்ளிக்கூடம் அமைந்திருப்பதாகவும், இதனால் குடிமகன்களுக்கு பயந்து அப்பாதையில் செல்லவே பெண்கள் மற்றும் பள்ளி மாணவியர் அஞ்சுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். எனவே அந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய மக்கள், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மக்களுடன் பேச்சுவார்த்த நடத்தினர். அதனைத் தொடர்ந்து மக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

வீடியோ:

English summary
Near Sathyamangalam, the village people staged a protest to remove tasmac shop in residential area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X