For Daily Alerts
Just In
பொய் வழக்கு டார்ச்சர்... மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தந்தை- மகன்- வீடியோ
மதுரை: போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்துவதாகக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் தனது மகனுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீக்குளிக்க முயன்ற நபரின் பெயர் கோச்சடை, அவரது மகன் பெயர் முத்துச்செல்வம் ஆகும். இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் முத்துச்செல்வன் தற்போது முன் ஜாமீன் பெற்று, நீதிமன்ற உத்தரவின்படி கரிமேடு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் விசாரணை என்ற பெயரில் பொய் வழக்குப் பதிவு செய்து தன்னை துன்புறுத்துவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்துச்செல்வம் தனது தந்தையும் தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
வீடியோ:
madurai auto driver collector office self immolation oneindia tamil videos மதுரை ஆட்டோ டிரைவர் கலெக்டர் அலுவலகம் தீக்குளிக்க முயற்சி ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
A self-immolation bid by an autorickshaw driver and his son over alleged harassment by police created flutter at the Madurai collector's office on Saturday.
Story first published: Monday, October 17, 2016, 12:40 [IST]