நெஞ்சுவலிக்கு லீவு தர மறுப்பு.. வண்டி ஓட்டியபடியே ஸ்கூல் பஸ் டிரைவர் பலியான பரிதாபம்- வீடியோ
சிவகங்கை: சிவகங்கையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில், சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். தினந்தோறும் இவர்கள் பள்ளி வாகனம் மூலம் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், பள்ளி வாகனத்தின் ஓட்டுநர் பாண்டி, தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி விடுமுறை கேட்டுள்ளார். ஆனால், பாண்டி விடுப்பெடுத்தால் மாணவர்களை யார் பள்ளிக்கு அழைத்து வருவது எனக் கூறி, விடுமுறை வழங்க நிர்வாகம் மறுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, உதவியாளருடன் பள்ளி வாகனத்தில் புறப்பட்ட பாண்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் பாய்ந்தது. வாகனத்தில் இருந்த உதவியாளர் வெளியே குதித்து உயிர் தப்பினார். அதிர்ஷ்டவசமாக அந்த வாகனத்தில் மாணவர்கள் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.