For Daily Alerts
Just In
தாளவாடி அருகே பகலிலேயே மணல் கொள்ளை.. அதிகாரிகள் துணையோடு நடப்பதாக மக்கள் புகார்- வீடியோ
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடியில் திகினாரை பகுதியில் அதிகாரிகள் துணையோடு மணல் கொள்ளை நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இப்பகுதியில் உள்ள 75 ஏக்கர் நிலப்பகுதியில் அமைந்துள்ள குளம் நீண்ட காலமாக நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், அதிகாரிகள் துணையோடு பகல் நேரங்களிலேயே இங்கு மணல் கொள்ளை நடைபெறுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இங்கு தோண்டி எடுக்கப்படும் மணல் கர்நாடகாவில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Comments
English summary
Near Sathyamangalam the public alleges that illegal sand mining is happening with official support.
Story first published: Wednesday, November 9, 2016, 17:03 [IST]