ஜெ. மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு.. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திரிஷா உருக்கம்- வீடியோ
மறைந்த தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தினமும் ஏராளமான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், நடிகை திரிஷா இன்று தனது தாயுடன் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். போலீசாரின் பாதுகாப்பு அரண்களை தாண்டி ஜெயலலிதா சமாதி அருகே சென்ற திரிஷா, அங்கு மலர் மாலை வைத்து விழுந்து கும்பிட்டு அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய திரிஷா, 'ஜெயலலிதாவின் மரணம் அரசியலில் மட்டுமல்ல, தமிழகத்திற்கே ஈடு செய்ய முடியாத இழப்பு' என உருக்கமாக பேசினார். பின்னர் திரிஷாவையும், அவரது தாயையும் போலீசார் பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.