For Daily Alerts
Just In
விழுப்புரம் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து... 5 பேர் பலி- வீடியோ
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு சென்று, எதிர்புறம் வந்த மற்றொரு அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில், நிலை தடுமாறிய இரண்டு பேருந்துகளும் சாலையில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேருந்துகளில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
villupuram government bus accident oneindia tamil videos விழுப்புரம் அரசு பேருந்து விபத்து ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Five persons, including a two-year-old child, died on the spot and 40 others were injured after a TNSTC bus collided with another bus coming in the opposite lane at Mundiyambakkam near Villupuram on Wednesday.
Story first published: Thursday, December 1, 2016, 10:08 [IST]