For Quick Alerts
For Daily Alerts
Just In
பாதாம் என நினைத்து ஆமணக்குகொட்டைகளை சாப்பிட்ட 12 குழந்தைகள்... மருத்துவமனையில் அனுமதி- வீடியோ
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள ஜவேலி கிராமத்தில், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 12 குழந்தைகள் பாதாம்கொட்டை என நினைத்து காட்டு ஆமணக்குகொட்டைகளை தவறுதலாகச் சாப்பிட்டு விட்டனர். இதனால் மயக்கம் அடைந்த அவர்களை பெற்றோர்கள் மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர்களில் இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வீடியோ:
Comments
villupuram children hospital oneindia tamil videos விழுப்புரம் குழந்தைகள் மயக்கம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Villupuram 12 children ate poisonous seeds mistakenly and admitted in hospital.
Story first published: Thursday, October 13, 2016, 15:31 [IST]