விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சடலத்துடன் சவுக்கு தோப்பில்.. கேட்க கேட்க ஷாக்கான போலீஸ்.. மிரள வைத்த "ஹோமோ"!

13 வயது சிறுவனை கொன்ற இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: "சவுக்குத்தோப்பில் சடலத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டேன்.. அப்பறம் சுடுகாட்டுக்கு கொண்டு போய் உடலை புதைச்சிட்டேன்" என்று சிறுவனை கொன்ற நண்பரின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்துள்ளது நொச்சிக்குப்பம் கிராமம்.. இங்கு வசித்து வருபவர் கோவிந்தராஜ்.. இவரது 13 வயது மகன் தேவன்ராஜ்... 8-ம் வகுப்பு படித்துள்ளார்.. இப்போது ஸ்கூல் லீவு என்பதால் வீட்டில்தான் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி திடீரென தேவன்ராஜை காணவில்லை.. எங்காவது விளையாட போயிருப்பான் என்று நினைத்து பெற்றோரும் பகல் முழுக்க கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.. நேரம் ஆக ஆக, இருட்டி கொண்டு வரவும் அதற்கு பிறகுதான் கலக்கம் அடைந்து மகனை தேட தொடங்கினர்.

ஒரே வாய்ப்பு.. கடைசி வாய்ப்பு.. பயன்படுத்துமா சிஎஸ்கே? நல்லா தேவைதான் என்கிறார்கள் ரசிகர்கள்ஒரே வாய்ப்பு.. கடைசி வாய்ப்பு.. பயன்படுத்துமா சிஎஸ்கே? நல்லா தேவைதான் என்கிறார்கள் ரசிகர்கள்

 கோவிந்தராஜ்

கோவிந்தராஜ்

ஆனாலும் மகன் கிடைக்கவே இல்லை.. இறுதியில் கோவிந்தராஜ் மரக்காணம் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் விசாரணை நடந்தது.. எந்த துப்பும் கிடைக்காததால், நொச்சிக்குப்பம் மீனவர் பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.. அப்போது ஒரு இளைஞருடன் சிறுவன் சென்று கொண்டிருப்பது சென்றது தெரியவந்தது.

அபினேஷ்

அபினேஷ்

இதையடுத்து, சிறுவன் பயன்படுத்தி வந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்... அதில், தேவன்ராஜ் யாருடன் கடைசியாக பேசினான் என்பதை கண்டறிந்தனர்.. அந்த லிஸ்ட்டில் அபினேஷ் என்ற இளைஞர் பெயர் இருந்தது.. இவர் அதே பகுதியை சேர்ந்தவராம். அவருடன்தான் கடைசியாக தேவன்ராஜ் சென்றுள்ளார்.

அடையாளம்

அடையாளம்

எனவே அபினேஷை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது.. அப்போது, தேவன்ராஜை அடித்து கொலை செய்ததை அபினேஷ் ஒப்புக் கொண்டார்.. மேலும் சடலத்தை குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் சொல்லி, அந்த புதைக்கப்பட்ட குழியை அடையாளமும் காட்டினார்... இதையடுத்து, அந்த குழி தோண்டப்பட்டு, அபினேஷ் சடலம் வெளியே எடுக்கப்பட்டது.. அந்த சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.. அதனால் அங்கேயே போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு, சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்பகை

முன்பகை

இதற்கு பிறகு அபினேஷ் போலீசாரிடம் சொல்லிய வாக்குமூலம் அதைவிட அதிர்ச்சியாக இருந்தது.. "எங்க 2 பேர் குடும்பத்துக்கும் பல வருஷமாக முன்பகை இருந்தது.. அதனால் தேவன்ராஜை கொலை செய்ய முடிவு செய்தேன்.. கடந்த 10-ம் தேதி தேவன்ராஜுடன் செல்போனில் பேசினேன்.

கிளிகள்

கிளிகள்

"ஒதுக்குப்புறமாக உள்ள பனை மரங்களில் கிளிகள் நிறைய இருக்கு, அவைகளை பிடித்து வளர்க்கலாம் வா" என்று சொல்லி கூப்பிட்டேன்.. கிளி என்றதும் தேவன்ராஜ் ஆசையாக என்னுடன் கிளம்பி வந்துவிட்டான்.. பனை மரங்கள் நிறைந்த சவுக்குத்தோப்பில் தேவன்ராஜை ஓரின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தினேன்.. அதற்கு அவன் மறுத்துவிட்டான்.

 ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கை

அந்த ஆத்திரத்தில் கட்டையால் அடித்தேன்.. அவன் மயங்கி விழுந்துவிட்ன்.. பிறகு அவனுடைய சட்டையை கழட்டி கழுத்தையும் நெரித்து கொன்றுவிட்டேன். அங்கேயே உயிர் போய்விட்டது.. பிறகு சடலத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டேன... அங்கேயே சவுக்குத்தோப்பு பக்கம் உள்ள சுடுகாட்டில் குழி தோண்டி உடலை புதைத்துவிட்டு வந்துவிட்டேன்.. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று வேலைக்கும் தினமும் போய்வந்தேன்" என்றார்.

English summary
13 year old boy killed by youth for homosexual near Vizhupuram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X