மதுபோதை.. நள்ளிரவில் ஆபாச நடனம்.. சென்னை இளைஞர்கள் 15 பேர் கைது.. 8 பெண்கள் ஓட்டம்!
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நள்ளிரவில் போதையில் நடனம் ஆடியதாக சென்னையை சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் ஆரோவில் அருகே முந்திரி தோப்பு உள்ளது. இங்கு பொதுவாக ஆண்கள் மது அருந்த வருவது வழக்கம். ஈசிஆர் சாலையில் இருப்பதால் இங்கு இளைஞர்கள் வட்டம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.
இந்த நிலையில் சென்னையிலிருந்து 15 ஆண்கள், 8 பெண்கள் ஆரோவில் அருகே உள்ள முந்திரி தோப்புக்கு நேற்ரு வந்திருந்தனர். அவர்கள் 23 பேரும் மது அருந்தினர்.
பின்னர் நிதானம் தெரியாமல் ஆபாச நடனம் ஆடி கொண்டிருந்தனர். இதனால் அக்கம்பக்கத்தில் வசிக்கும் அப்பகுதி மக்கள் இடையூறை சந்தித்தனர். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது அங்கு போதையில் ஆடிக் கொண்டிருந்த இளைஞர்களை சுற்றி வளைத்தனர். போலீஸாரை கண்டதும் அங்கிருந்த 8 பெண்களும் ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து அந்த 15 பேரை போலீஸார் கைது செய்து அங்கிருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மது விருந்து, போதையில் நடனம் என ஆங்காங்கே நடைபெறும் இந்த கலாச்சார சீரழிவுகளால் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.