படித்தது 10-ம் வகுப்பு.. 40 வருடம் சர்வீஸ்.. விழுப்புரத்தில் போலி மருத்துவர்கள் 2 பேர் கைது
விழுப்புரம்: விழுப்புரம் அருகே 10-ம் வகுப்பு முடித்து விட்டு சித்தமருத்துவம், ஹோமியோபதி பார்த்த போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி மருத்துவர் செல்வபாலன் (62) 40 வருடங்களாக விக்கிரவாண்டியில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அதேபோன்று டிப்ளமோ படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த ரவிச்சந்திரன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி மருத்துவர்களால் உயிரிழப்பு ஏற்படுவதுடன் பலர், பக்கவிளைவுகளால் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் ரெய்டு நடத்தி போலி மருத்துவர்களை கைது செய்ய சுகாதாரத்துறை இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அதிரடி சோதனை நடந்து வருகிறது.
முன்னதாக, பொள்ளாச்சி அருகேயுள்ள மெட்டுவாவி என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜின் மனைவி வனிதாமணி, கர்ப்பமடைந்துள்ளார். வடசித்தூர் பகுதியில் ஆயுர்வேத மருத்துவம் பார்த்து வந்த முத்துலட்சுமி என்பவர், வனிதாமணிக்கு கருக்கலைப்பு ஊசி போட்டு உள்ளார். இதில், வனிதாமணி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சுகாதாரத்துறையினர் நடத்திய விசாரணையில், முத்துலட்சுமி போலி மருத்துவர் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.