விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏசியில் கேஸ் கசிவு.. மூச்சுதிணறலால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி.. திண்டிவனத்தில் சோகம்

Google Oneindia Tamil News

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஏசி இயந்திரத்தில் கேஸ் கசிவு ஏற்பட்டதால் மூச்சுதிணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகிவிட்டனர்.

திண்டிவனம் அருகே காவேரிபட்டினத்தை சேர்ந்தவர் ராஜி. இவர் அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்துள்ளார். இவர் நேற்று இரவு தனது மனைவி லதா, மகன் கவுதம் ஆகியோருடன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் உறங்கி கொண்டிருந்தார்.

3 were died after leakage in AC near Tindivanam

அப்போது மின்கசிவு ஏற்பட்டு ஏசி இயந்திரத்திலிருந்து கேஸ் கசிந்துள்ளது. இந்த கேஸை சுவாசித்ததால் மூவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதுவல்லவோ மனிதநேயம்.. முடக்குவாதம் பாதித்த சிறுவனுக்கு உணவு ஊட்டும் சிஆர்பிஎஃப் வீரர்- வைரல் வீடியோஇதுவல்லவோ மனிதநேயம்.. முடக்குவாதம் பாதித்த சிறுவனுக்கு உணவு ஊட்டும் சிஆர்பிஎஃப் வீரர்- வைரல் வீடியோ

இதைத் தொடர்ந்து தூக்கத்தில் இருந்ததால் அவர்களால் கேஸ் கசிவை உணர முடியவில்லை. மயக்க நிலையிலேயே 3 பேரும் பலியாகிவிட்டனர். இதனால் அப்பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த கவுதமனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A family of 3 were died of breathlessness after electric leakage from AC, near Kaveripattinam, Tindivanam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X